Hero Image

இப்படியுமா நடக்கும்... தினந்தோறும் அதிகரித்த தந்தையின் கொடுமை.. 12ம் வகுப்பு மாணவி தற்கொலை!


மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் உள்ள ராவத் பலாசியா கிராமத்தைச் சேர்ந்தவர் சவுகான். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். முத்த மகள் பூஜா (வயது 17) பிளஸ் 2 படித்து முடித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வில் பூஜா  74 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். இதனிடையே குடிப்பழக்கத்திற்கு அடிமையான சவுகான், தினமும் குடித்து விட்டு மனைவியை தாக்கியுள்ளார்.

இதனால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையில் பூஜா அடிக்கடி தனது தந்தையிடம் மது குடிப்பதை நிறுத்துமாறும், தாயை அடிக்க வேண்டாம் என்றும் கூறி வந்துள்ளார். ஆனால், மகள் சொல்வதைக் கேட்காமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் சவுகான், மனைவியைத் தொடர்ந்து தாக்கி வந்துள்ளார். இதனால், பூஜா தனது தாயுடன் சேர்ந்து சவுகான் மீது புகார் அளித்தார். ஆனால், புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், தனது தாயை தந்தை தொடர்ந்து தாக்கியதால் விரக்தியடைந்த பூஜா நேற்று மாலை தனது வீட்டின் மொட்டை மாடியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பூஜா எழுதிய கடிதத்தில், தந்தை குடித்துவிட்டு தாயை தினமும் அடிப்பார். புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலை செய்வேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தீக்குளித்த பூஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்திவிட்டு தாயை தந்தை தாக்கியதால் விரக்தியில் மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

READ ON APP