Hero Image

2 கார்கள் நேருக்கு நேர் மோதி தம்பதி உட்பட 3 பேர் உடல் நசுங்கி பரிதாபப் பலி... 3 பேர் படுகாயம்!


 தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து  சுதா ராமகிருஷ்ணன் மகன் 30 வயது மணிஷ் தனது  மனைவி கீர்த்தியுடன் புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா வந்தார். சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை ஜாலியாக  சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் இன்று காலை சொந்த ஊர் திரும்பினர்.புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி எதிரில் வந்து கொண்டிருந்த மற்றொரு  காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

ஒரு வழிப்பாதையில் சென்றதால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில்  படுகாயம் அடைந்த மணிசும்,  அவரது மனைவி கீர்த்தியும்  சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.எதிரில் சென்னையில் இருந்து வந்த காரில் பயணம் செய்த 50வயது பழனியும் சம்பவ இடத்திலேயே   பலியானார். அவரது மனைவி ஜெயந்தியும், 2 கார்களின் டிரைவர்களும் படுகாயம் அடைந்து  திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. உறவினர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து  போலீசார்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

READ ON APP