Hero Image

பஞ்சாங்கம் மார்ச் 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari 3 இன்றைய பஞ்சாங்கம்: மார்ச் 24

ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம

||श्री:|| 

!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்

!!ஸ்ரீ:!!

श्री:
श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்
பங்குனி ~ 11 (24.3.2024 ) ஞாயிற்றுக் கிழமை*
வருடம் ~ சோபக்ருத் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { *மீன மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ காலை 11.13 am வரை சதுர்த்தசி பின் பௌர்ணமி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 8.45 am வரை பூரம் பின் உத்தரம்
யோகம் ~ கண்டம்
கரணம் ~ வணிஜை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.

எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30. நல்லநேரம் * ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.19
சந்திராஷ்டமம் ~ மாலை 3.22 வரை மகரம் பின் கும்பம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ பௌர்ணமி
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!


!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்

பிற்பகல்

12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்

மாலை

4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (24-03-2024) ராசி பலன்கள் மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!

சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். பயணங்களின் மூலம் சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எந்தவொரு செயலிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.

பரணி : தெளிவு ஏற்படும்.
கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!

நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனை தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். ஆதரவாக இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பயம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

கிருத்திகை : உதவி கிடைக்கும்.
ரோகிணி : புரிதல் மேம்படும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!

வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உயர் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். பணிகளில் உயர்வான சூழல் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : வாய்ப்பு கிடைக்கும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : உயர்வான நாள்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!

சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். உத்தியோகப் பணிகளில் நுட்பமாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூசம் : ஆதாயம் ஏற்படும்.
ஆயில்யம் : வெற்றிகரமான நாள்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!

புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றி மறையும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று சிந்தித்துச் செயல்படவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : அறிமுகம் உண்டாகும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!

விவசாயம் தொடர்பான பணிகளில் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். போட்டித் தேர்வுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கூட்டு தொழிலில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : அலைச்சலான நாள்.
அஸ்தம் : தெளிவு ஏற்படும்.
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!

உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எண்ணங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
சுவாதி : அனுகூலம் உண்டாகும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!

மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த விஷயங்களுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : சிந்தனை உண்டாகும்.
அனுஷம் : அனுபவம் வெளிப்படும்.
கேட்டை : முடிவுகள் பிறக்கும்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சமூகம் சார்ந்த பணிகளில் மதிப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் குறையும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : மதிப்பு மேம்படும்.
உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!

எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தமான சூழல் ஏற்படும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : விவேகத்துடன் செயல்படவும்.
திருவோணம் : நிதானம் வேண்டும்.
அவிட்டம் : பிரச்சனைகள் நீங்கும்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!

உடன்பிறந்தவர்களால் மனதளவில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வருமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய நபர்களால் அலைச்சல் உண்டாகும். எதிலும் தாழ்வுமனப்பான்மை இன்றி செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
சதயம் : அலைச்சல் உண்டாகும்.
பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!

பிறமொழி பேசும் மக்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : சுறுசுறுப்பான நாள்.
ரேவதி : புதுமைகள் பிறக்கும்.

தினம் ஒரு திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)

பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே

விளக்கவுரை

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)

விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.

READ ON APP