Hero Image

தங்கம் வாங்க ரெடியா ? நள்ளிரவு வரை நகைக் கடைகள் திறந்திருக்கும்..!


இந்த ஆண்டு அட்சய திருதியை நாளை (மே 10) காலை 6.33 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 4.56 மணிக்கு முடியும். இதையொட்டி, வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாளை நள்ளிரவு வரை நகைக் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் 20,000 கிலோ தங்கம் விற்பனையானது.

கடந்த ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.45,000-க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.53,000-ஐ கடந்து விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: இந்த ஆண்டு அட்சய திருதியைதினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடி சலுகைகளை நகைக் கடைகள் அறிவித்துள்ளன.

நகைக் கடைகளில் புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எடை குறைவான நெக்லஸ், ஃபேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் ஆகியவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அட்சய திருதியை, வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை நீடிக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நகைக் கடைகள் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

READ ON APP