Hero Image

இதை தெரிஞ்சிகோங்க..! கர்பிணிகள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது தெரியுமா ?


மீன்கள்:

ஆற்று மீன்களையோ குளத்து மீன்களையோ அல்லது ஐஸ் வைத்த பதப்படுத்தப்பட்ட மீன்க ளை யோ சாப்பிடக்கூடாது. கர்பிணிகள் இந்த மாதிரியான மீன்களை உண்பதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரித்து கர்பநேரத்தில் அவர்களது உடலில் இருக்கவே ண்டிய தண்ணீரின் அளவும் குறைந்துவிடும்.

அசைவ உணவுகள்:

ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை & பால் பொருட்கள் ஆகிய உணவுகளை நன்றாக பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது. பாதிவேக்காட்டில் சமைக்கப்பட்ட உண வுகளில் சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா இருப்பதால், அது, கருவின் வளர்ச்சியை பாதிப்படைச்செய்கிறது. மேலும் லிஸ்டீரியா என்னும் பாக்டீரியா வகையும் அதில் காணப்படுவதால், கருச் சிதை வும் ஏற்படும் அபாயம் உண்டு.

துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்: துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உண்வு வகைகளையும் பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டுள் ள பால் பொரு ட்களை சாப்பிடக்கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதி ப்பை ஏற்படுத்தும்.


பழங்கள்

அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளிப் பழம் ஆகிய இரண்டு பழ வகைகளை சாப்பிடக்கூடாது. இந்த பழங்களை கர்பிணிகள் சாப்பிடுவதால், அவர்கள் உடலில் உள்ள வெப்பத்தின் அளவு அதிகமாகி கருச்சிதைவிற்கு காரணாகி விடும்.அதேபோல பப்பாளியிலும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் அதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். அதிலும் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்கள கரு கலைந்துவிடும்.

வெல்லம் உடலின் வெப்பத்தை தூண்டும் பொருள். இதிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அதிகம் சேர்த்தாலும் கரு அழிந்துவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்.

காய்கறிகள்

பொதுவாக நம் வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய்தான் இந்த கத்திரிக்காய். தினமும் அரை கத்திரிக்காய்  சாப்பிட்டு வந்தால் கூட அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து. அதோடு கத்திரிக்காயில் இருக்கும் சத்து, மாதவிடாயை வரச் செய்திடும். இதனால் கர்ப்பத்தின் போது இந்தக்காய் சாப்பிடக்கூடாது.

கர்ப்பமான பெண்கள் பெருஞ்சீரகம் மற்றும் மல்லி விதைகளை தவிர்ப்பது நல்லது. இவை அதிகமானால் ஆபத்தையே ஏற்படுத்திடும். இது நம் உடலில் பைட்டோ ஈஸ்ட்ரோஜனை  அதிகப்படுத்திவிடும். இதனால் கருப்பை  வலுவிழக்க வாய்ப்புகள் உண்டு.

பொதுவாக ரத்த சோகை இருப்பவர்களுக்கான மருந்துதான் இந்த எள். அதனால் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. சிலருக்கு இது கருக்கலைப்பை ஏற்படுத்திவிடும். மேலும் கருப்பையின்  தசைகளை தளர்த்திடும். முதல் ட்ரைம்ஸ்டரில் இதனை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்திடல் வேண்டும்.

பொதுவாக கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லது தான். ஆனால் சமைக்காத அல்லது பாதி வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவது கருவில் வளரும் குழந்தைக்கு நல்லதல்ல. 

பதப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் காலாவதியாகியிருந்தால் அவற்றை குடிக்ககூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நிறைய பேர் கர்ப்ப காலத்தில் மிஞ்சிய பிரியாணிகளையும், கறிகளையும் பிரிட்ஜில் வைத்து குளிர்வித்து சாப்பிடுவது உண்டு. இந்த உணவில் உருவாகும் பாக்டீரியாக்கள் வயிற்றில் வளரும் குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

READ ON APP