Hero Image

பழனி முருகன் கோவிலில் இன்று திருத்தேரோட்டம்..!


பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோயிலான திருஆவினன்குடி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கிரி வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.  இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

விழாவின் முக்கிய நிகழ்வானபங்குனி உத்திரத் தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கிரி வீதிகளில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  திருவிழாவையொட்டி  பக்தர்களின் வசதிக்காக வரும் 26-ம் தேதி வரை திருச்சி, மதுரை,தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழனிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

READ ON APP