Hero Image

Government to Borrow: ரூ.7.5 லட்சம் கோடி கடன் வாங்கும் மத்திய அரசு... நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்க திட்டம்....

2024ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையான காலக்கட்டத்தில் மத்திய அரசு ரூ.7.5 லட்சம் கோடி கடன் பெறும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் போது இந்த நிதியாண்டில் மொத்தமாக மத்திய அரசு ரூ.14.13 லட்சம் கோடி கடன் பெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதாவது 2024-25ம் நிதியாண்டின் முதல் பாதியில் 53 சதவிகிதம் கடன் வாங்கப்படும் என்பதாகும். இதற்கு முந்தைய ஆண்டுகளின் முதல் அரையாண்டில் கடன் பெறும் அளவு 60 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகும் இருந்தது. இது குறித்து பேசிய நிதிச் செயலாளர் டி வி சோமநாதன், தற்போது கடன் அளவு குறைந்திருப்பதற்கு முக்கிய காரணம், இருப்பு தொகை அதிகப்படுத்துவதற்கான முயற்சி மற்றும் கடன் வாங்கும் செலவை குறைப்பது போன்ற நடவடிக்கைகளே காரணம் என தெரிவித்தார். மத்திய அரசு தேவைக்கு மட்டுமே கடன் வாங்குகிறது, தேவைக்கு அதிகமாக பணத்தை வைத்திருக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
கடன் வாங்குவது புதிய கொள்கை முடிவு அல்ல, இது அரசாங்கத்தின் செயல்பாட்டில் ஒரு தொடர்ச்சியான செயலாகும் என்றும் டி வி சோமநாதன் கூறினார். மேலும் மத்திய அரசு கடன் வாங்குவது குறித்து இந்தியா ரேட்டிங் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் தேவேந்திர குமார் பந்த் பல கருத்துகளை தெரிவித்துள்ளார். அதாவது 2023-24ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி செயல்திறன் மற்றும் காலாண்டு வேகத்தின் அடிப்படையில், 2024-25 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி பட்ஜெட் மதிப்பீட்டின் 10.5 சதவீதத்தை விட அதிகமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இது அடுத்த நிதியாண்டில் வரி வசூல் தொகையை அதிகரிக்கும் அதே நேரத்தில், கடனை குறைப்பதற்கும் வழிவகுக்கும் என தெரிவித்தார். மேலும் க்ரா ரேட்டிங் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர், நிதியாண்டின் முதல் பாதியில் அரசாங்கத்தின் மொத்த விநியோகத்தில் 15.5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து. 2024ம் ஆண்டு ஜூன்யின் இறுதியில் தொடங்கும் பத்திரக் குறியீட்டுச் சேர்க்கையுடன், G-secக்கான வட்டி விகிதம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது 2024-25ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் 10 ஆண்டில் முதிர்வடையும் கடன் பத்திரத்தின் வட்டி விகிதம் 6.8 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வர்த்தகம் செய்யப்படும் என தெரிவித்தார்.நிதியாண்டின் முதல் அரையாண்டில் கடன் பத்திரங்கள், தங்க முதலீட்டு பத்திரங்கள் மூலமாக ரூ.
12,000 கோடி வரை நிதி திரட்ட முடியும். இதுமட்டும் இல்லாமல் சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார சூழல்களின் அடிப்படையில் தேவைக்கு ஏற்ப 15 ஆண்டுகளில் முதிர்வடையும் வகையிலான கடன் பத்திரங்களை வெளியிடப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு 3, 5, 7, 10, 15, 30, 40 மற்றும் 50 ஆண்டு முதிர்வடையும் வகையிலான கடன் பத்திரங்களை சந்தையில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கால அளவில் முதிர்வடையும் வகையில் கடன் பத்திரங்கள் வெளியிடப்படும். அதில் 3 ஆண்டு முதிர்வடையும் வகையிலான கடன் பத்திரங்கள் 4.80 சதவீதமும் , 5 ஆண்டு முதிர்வடையும் வகையிலான கடன் பத்திரங்கள் 9.6 சதவீதமும், 7ஆண்டு முதிர்வடையும் வகையிலான கடன் பத்திரங்கள் 8.80 சதவீதமும், 10 ஆண்டு முதிர்வடையும் வகையிலான கடன் பத்திரங்கள் 25.60 சதவீதமும், 15 ஆண்டு முதிர்வடையும் வகையிலான கடன் பத்திரங்கள் 13.87 சதவீதம், 30 ஆண்டு முதிர்வடையும் வகையிலான கடன் பத்திரங்கள் 8.93 சதவீதம், 40 ஆண்டு முதிர்வடையும் வகையிலான கடன் பத்திரங்கள் 19.47 சதவீதமும், 50 ஆண்டு முதிர்வடையும் வகையிலான கடன் பத்திரங்கள் 8.93 சதவீதமும் வெளியிடப்பட்டுள்ளன.
நீண்ட கால கடன் 1 ஆண்டு முதல் 50 ஆண்டுகள் முதிர்வடையும் பத்திரங்கள் மட்டும் இல்லாமல் குறுகிய கால கடன் வாங்குவதற்கான கருவூல பில்கள் வழங்கப்படுகின்றன. அதாவது 91 நாட்கள், 182 நாட்கள் மற்றும் 364 நாட்கள் தேதியிட்ட பத்திரங்கள் வட்டி விகிதத்துடன் வழங்கப்படுகின்றன.

READ ON APP