Hero Image

குறைந்த விலை அதிக திறன் வாய்ந்த லேப்டாப்கள் உற்பத்தி... விரைவில் ஐபிஓ வெளியிட திட்டமிடும் சென்னை நிறுவனம்...

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹோலாவேர் நிறுவனம் பயன்பாடுகளின் அடிப்படையில், ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது மாணவர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப, தொழில்துறையினரின் தேவை பூர்த்தி செய்யும் வகையான மடிக்கணினி, கேமிங் துறையில் இருப்பவர்கள் பயன்படுத்தக் கூடிய வகையிலான மடிக்கணினிகள் என 4 வகையான புதிய மடிக்கணினிகளை ஹோலாவேர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மடிக்கணினி துறை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதையடுத்து 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹோலாவேர் நிறுவனம் மடிக்கணினி மற்றும் கணினி தயாரிப்பில் குறிப்பிட்டத்தக்க இடத்தை பிடித்து வருகிறது. இந்த துறையில் பெருநிறுவனங்களின் போட்டி அதிக அளவில் இருந்தாலும், கணிசமாக சந்தை பங்களிப்பு வைத்திருப்பதாக நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராகவேந்திரா கணேஷ் தெரிவித்தார். அதாவது எங்களின் சந்தை பங்களிப்பு 5 சதவிகிதத்துக்கு குறைவாகவே உள்ளது.
இதை இன்னும் உயர்த்த வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என தெரிவித்தார். அதாவது 2024-25 நிதியாண்டில் சந்தை பங்களிப்பை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது மாணவர்களுக்கான கிஸ்மோஸ் எடு, அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவோருக்கு கிஸ்மோஸ் எக்ஸியூட்டிவ், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் வகையில் ரக்டு மடிக்கணினி என 4 வகையான கணினிகளை அறிமுகப்படுத்தி உள்ளதாக ராகவேந்திரா தெரிவித்தார். இதில் அதிநவீன கிராபிக்ஸ், அதிவேக செயலாக்கம், லேப்டாப் அதிகம் வெப்பம் அடையாமல் இருப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
மடிக்கணினி சந்தையில் பெரு நிறுவனங்களின் லோப்டாப்களை விட 15% முதல் 20% வரை குறைந்த விலையில் விற்பனை செய்தாகவும், அதற்கு முக்கிய காரணம் தமிழகத்திலேயே உற்பத்தி செய்வதாலும் செலவு குறைவாக உள்ளது. உற்பத்தி முழுவதும் இங்கே இருப்பதால் இறக்குமதி செலவு பெரிய அளவில் இல்லை என்பதால் விலை குறைக்க முடிகிறது. தற்போதைய சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள், வங்கிகளுக்கு தேவையான கம்பியூட்டர்களை சப்ளை செய்து வருகிறோம். எங்களின் சேவையை மேம்படுத்துவதன் மூலமாக விற்பனை அதிகரிக்க முடியும் என்று அவர் கூறினார்.
தற்போது தமிழ்நாடு, கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சேவை வழங்கி வருவதாகம், மொத்தமாக 238 ஸ்டோர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுமட்டும் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி குறித்த கேட்டதற்கு 2027ம் ஆண்டுக்கு ஐபிஓ வருவதே எங்களின் இலக்கு என ராகவேந்திரா தெரிவித்தார்.

READ ON APP