Hero Image

மது அருந்தி வருவதை தட்டிக் கேட்ட மாமியார்.. துடிக்க துடிக்க அடித்துக் கொன்ற மருமகன்.. பயங்கரம்

சென்னை: தினமும் வீட்டுக்கு மது அருந்தி வருவதை தட்டிக் கேட்ட மாமியாரை மருமகன் அடித்தே கொன்ற பயங்கர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.சென்னை மாதவரம் கண்ணன் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். 35 வயதான இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருந்தனர். இதனிடையே, புஷ்பராஜ் வேலைக்கு ஏதும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதும், மனைவி ஜான்சியை அடித்து துன்புறுத்துவதுமாக இருந்து வந்தார்.
இதை பல முறை ஜான்சியின் வீட்டார் கண்டித்தும், புஷ்பராஜ் தனது பழக்கத்தை கைவிடுவதாக இல்லை. திருச்சி கல்லூரி மாணவி மரணத்தில் போலீஸ் பகீர் சந்தேகம்.. அது எப்படி அங்க மட்டும் அடிபடும்?இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல புஷ்பராஜ், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி ஜான்சியின் தாயார் வசந்தியும் (65) வீட்டில் இருந்திருக்கிறார். ஆனால், வேண்டுமென்றே அவரது கண் முன்னே ஜான்சியை அடித்துள்ளார் புஷ்பராஜ். இதனால் ஆத்திரமடைந்த வசந்தி, "என் கண் முன்னாடியே என் மகளை அடிப்பீங்களா..
உருப்படியா வேலைக்கு போக முடியலையா உங்களால" எனக் கேட்டுள்ளார்.இதனால் கோபமடைந்த புஷ்பராஜ், வீட்டில் இருந்த விறகுக் கட்டையை எடுத்து, வசந்தியை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடந்த வசந்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்தனர்.

READ ON APP