Hero Image

விவிபேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி... இரு தரப்பு வாதங்கள் நிறைவு... தீர்ப்பு எப்போது?

நாட்டின் 18வது மக்களவையை தேர்வு செய்வதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். எலக்ட்ரானிக் இயந்திரம் என்பதால் வாக்குகளை வேறு கட்சிகளுக்கு மாற்றி முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இருதரப்பு வாதங்களும் இன்று நிறைவடைந்தன. ஆனால் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

READ ON APP