Hero Image

ராகுல் காந்தி நேரு குடும்பமா ? அவருக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கணும்: எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் கோலாகலமாக கடந்த ஏப்ரல் 19 துவங்கியது. 7 கட்டங்களில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 26 நடக்கவிருக்கிறது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. களத்தில் மோதும் காங்கிரஸுக்கு வாக்களிக்க சொன்னாரா பினாராயி விஜயன்? குழப்பத்தை உண்டாக்கும் வீடியோ உண்மைதானா ?
தமிழ்நாடு போலவே, கேரள மாநிலத்திலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், என்டிஏ என இங்கு மும்முனை போட்டி நடக்கிறது. எனினும், கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறது. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார் ராகுல் காந்தி. சமீபத்தில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல், கேரள முதல்வர் பினராயி விஜயன் குறித்து பேசி இருந்தார்.
நான் ஜெயிலுக்கு போகலையேன்னு ராகுலுக்கு வருத்தம்.. அவங்க பாட்டி என்ன பண்ணாங்க தெரியுமா? சீறிய பினராயி விஜயன்!!தற்போது ராகுலின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் கேரளாவின் நீலாம்பூர் தொகுதி எம்எல்ஏ PV அன்வர். PV அன்வர் கேரள மாநிலத்தில் ஆளும் கூட்டணியான LDFக்கு ஆதரவான ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆகும். நேற்று பாலக்காடில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட PV அன்வர், ராகுல் காந்தி ஒரு கீழ்தரமான குடிமகன், அவர் நேரு குடும்பத்தில் பிறந்தாரா? அவருக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
அப்போது பேசிய சுயேட்சை வேட்பாளர் அன்வர், "நான் வயநாட்டில் வசிப்பவன், இங்குதான் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.. அவருடைய இரண்டாவது பெயரான 'காந்தி'யோடு அவரை அழைக்கமாட்டேன்.. அவர் மிகவும் கீழ்தரமான மனிதராகி இருக்கிறார். அதனால் காந்தி என்ற பெயரோடு அவரை அழைக்கமாட்டேன்.. இதை நான் சொல்லவில்லை.. கடந்த இரண்டு நாட்களாக நாடே இதைத்தான் சொல்கிறது. நேரு குடும்பத்தில் இவரைப் போன்ற ஒருவர் இருக்க முடியுமா? நேரு குடும்பத்தில் பிறந்த ஒருவரால் அப்படி பேச முடியுமா?
(பினராயி விஜயன் குறித்து ராகுல் காந்தி பேசியது) எனக்கு மிகப் பெரிய சந்தேகம் உள்ளது.. என்னைக் கேட்டால் ராகுல் காந்திக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கவேண்டும்.. நேருவின் பேரனாக வளர ராகுல் காந்திக்கு எந்த தகுதியும் இல்லை.. அவர் பிரதமர் மோடியின் ஏஜெண்ட் என்கிற கோணத்திலும் யோசிக்க வேண்டும்" என பேசியிருக்கிறார் எம்எல்ஏ அன்வர். அவரது இந்த பேச்சு கடுமையாக வைரலாக காங்கிரஸ் கட்சியினரின் கண்டனத்தை பெற்றது. மேலும், கேரள மாநில காங்கிரஸ் தலைவர், நேரு குடும்பம் குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் தகாத மொழியை பயன்படுத்தி அன்வர் பேசியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் காங்கிரஸ் பூஜ்ஜியம்.. LDF 20 ? தீயாய் பரவும் கருத்துக்கணிப்பு ரிப்போர்ட் ! இதுதான் நிலவரமா ??தொடர்ந்து பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ஹாசன், அன்வர் முதல்வர் பினராயி விஜயனின் தற்கொலை படையாக செயல்படுவதாகவும் மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் பேசக்கூடாத விஷயங்களை பேசியதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

READ ON APP