Hero Image

வீட்டில் செல்வம் பெருக குபேரரை இப்படி வழிபடுங்க

உலகில் பணக்கார கடவுள் என அனைவராலும் போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்தவர் குபேரர் என புராணக் கதைகள் சொல்கின்றன. சிவ பெருமானை நோக்கி 800 ஆண்டுகள் தவம் செய்து, அவரின் அன்புக்குரியவராக மாறியவர் குபேரன் என்பதால், குபேரனை வழிபடுவதால் சிவன், மகாலட்சுமி, பெருமாள் போன்ற தெய்வங்களின் அருளையும் பெற முடியும் என சொல்லப்படுகிறது.

குபேர வழிபாடு :

செல்வத்தின் அதிபதியாக திகழும் குபேரன், பணம், பொருள், நகைகள் போன்ற அத்தனை செல்வங்களையும் வாரி வழங்கக்கூடியவர். குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழக்கிழமை ஆகும். வெள்ளிக்கிழமையில் எப்படி மகாலட்சுமியை வேண்டி வழிபடுகிறோமோ, அதேபோல வியாழக்கிழமையில் குபேர வழிபாடு செய்வது சிறப்பானதாகும். வியாழக்கிழமை குரு பகவான், குருமார்கள் வழிபாட்டுபடன் சில குறிப்பிட்ட முறையில் குபேர பகவானையும் வழிபாடு செய்தால் நம்முடைய வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்.


​வியாழக்கிழமையில் குபேரனை வழிபடும் முறை :

* வியாழக்கிழமையன்று காலை குளித்து முடித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். * வாசல் நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.* வீட்டின் பூஜையறையில் குபேரர் படத்தை வைத்து, தாமரை மலர், சங்கு ஆகியவற்றை இருபுறமும் வைத்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.* நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. எனவே குபேர பூஜையின் பொழுது கட்டாயம் நெல்லிக்கனியை வைத்து வழிபட வேண்டும். * குபேரருக்கு மிகவும் பிடித்த உணவு அவல் என்பதால் அவலுடன் சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். * சிவனுக்கு மிகவும் விருப்பமான வில்வ இலை கொண்டு குபேரரை அர்ச்சனை செய்தால் அவரது மனம் மகிழ்வார்.


​குபேர விளக்கு பூஜை வழிபாடு :

* வியாழக்கிழமை அன்று குபேர விளக்கு அல்லது அகல் விளக்கு மற்றும் மனை அல்லது தட்டிற்கு மஞ்சள், குங்குமத்தை ஒற்றைப்படையில் வைத்து அலங்கரித்து கொள்ள வேண்டும். * குபேர விளக்கு வைக்கும் மனை அல்லது தட்டில் பச்சரிசியை பரப்பி, அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து கொள்ளுங்கள்.* பின்பு குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குபேரருக்கு உகந்த பச்சை நிற திரி கொண்டு விளக்கு ஏற்றுவது மிகச்சிறப்பு. பச்சை நிற திரி இல்லையெனில் பஞ்சு திரியையும் பயன்படுத்தலாம்.* குபேரருக்கு உகந்த வடக்கு திசை நோக்கி குபேர விளக்கை அல்லது அகல் விளக்கை ஏற்ற வேண்டும். குபேர விளக்கில் ஐந்து கற்கண்டு சேர்த்து விளக்கை சுற்றி வாசனை மலர்கள் வைக்க வேண்டும். கற்கண்டு சேர்ப்பது பணவரவை அதிகரிக்க செய்யும்.

ராகு காலத்தில் எதற்காக துர்க்கையை வழிபட வேண்டும் ?


நிலைவாசலில் விளக்கேற்ற காரணம் :

* குபேர விளக்கு ஏற்றிய பின் வீட்டின் நிலை வாசலில் குபேரருக்கு உகந்த வடக்கு திசையில் விளக்கை வைக்க வேண்டும்.* செல்வத்தின் அதிபதியான குபேரனை வீட்டின் வாசலில் வைத்து பூஜித்தால், நமது செல்வத்திற்கு பாதுகாப்பும், செழிப்பும் உண்டாகும்.* குபேர மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டு விளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது.* ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் உங்கள் வீட்டு நிலை வாசற்படியில் இவ்வாறு வடக்கு திசை நோக்கி குபேர விளக்கு ஏற்றி வர உங்கள் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.


குபேர வழிபாட்டு பலன்கள் :

குபேரர் செல்வத்தின் அதிபதியாக இருப்பதால், அவரை வழிபடுவதன் மூலம் செல்வம் பெருகும். கடன் சுமையால் அவதிப்படுபவர்கள் குபேரரை வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க குபேர வழிபாடு உதவும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, செழிப்பு நிலவுவதற்கு குபேர வழிபாடு சிறந்தது. நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை பெற குபேர வழிபாடு உதவும்.

READ ON APP