Hero Image

நாளை அக்னி நட்சத்திரம் 2024 ஆரம்பம்...தோஷம் ஏற்படாமல் இருக்க இந்த பரிகாரத்தை பண்ணுங்க

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் காலம் என சொல்லுவதுண்டு. நவகிரகங்களில் தலைமை கிரகமாக போற்றப்படும் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. பஞ்சாங்கத்தின்படி சூரிய பகவான் பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் துவங்கி, கிருத்திகை முழுவதும் வலம் வரும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என குறிப்பிடுகிறோம்.
சூரியன் மேஷ ராசியில் பயணிக்கும் சித்திரை மாதத்தில் உச்சம் பெற்று காணப்படும் போது வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும். சுமார் 25 நாட்கள் இந்த உக்கிர காலம் நீடிக்கும்.இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 04ம் தேதி சனிக்கிழமையான நாளை துவங்கி, மே 28ம் தேதி செவ்வாய்கிழமை வரை நீடிக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் தலைமை பண்பு, அரச பதவி, அதிகாரம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு காரணமானவராக சூரிய பகவான் இருக்கிறார். அவர் உக்கிரம் அடைந்திருக்கும் இந்த கால கட்டத்தில் நமக்கு தோஷம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
இதற்கு அக்னி நட்சத்திர தோஷம் என்று பெயர். இப்படி சூரியனால் தோஷம் ஏற்படுபவர்கள் பல விதமான நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் அக்னி நட்சத்திர காலத்தில் சில எளிய தோஷ நிவர்த்தி பரிகாரங்களை செய்வது நன்மை தரும். மே 2024 : முக்கிய விரத, விசேஷங்கள், சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வாஸ்து நாட்கள் முழு விபரம்அக்னி நட்சத்திரம் துவங்கும் நாளான மே 04ம் தேதி காலையில் எழுந்து ஒரு சொம்பு நிறைய தண்ணீர் பிடித்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
அதற்கு 5 ரூபாய் நாணயம் ஒன்றை போட்டு வையுங்கள். மறுநாள் மே 05ம் தேதியன்று காலையில் எழுந்து, முதல் நாள் பூஜை அறையில் தண்ணீர் நிரப்பி வைத்த சொம்பில் இருக்கும் தண்ணீரை எடுத்து வீடு முழுவதும் தெளிவித்து விட வேண்டும். மீதம் இருக்கும் தண்ணீரை, வாசல் தெளிக்கும் தண்ணீருடன் சேர்த்து வாசலிலும் தெளிவித்து விடலாம். இப்போது அந்த சொம்பில் இருக்கும் 5 ரூபாய் நாணயத்தை அப்படியே வைத்து விட்டு, அதில் வேறு புதிய தண்ணீரை நிரப்பி, மீண்டும் பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.இவ்வாறு அக்னி நட்சத்திரம் காலம் முடியும் வரை தினமும் சொம்பில் தண்ணீர் நிரப்பி வைத்து, அதை மறு நாள் வீடு முழுவதும் தெளிவித்து வர வேண்டும்.
இப்படி செய்வதால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதுடன், சூரியனை குளிர்விக்க முடியும். அதோடு சூரியனின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும். மே 08ம் தேதி அமாவாசை நாளில் அதிகாலையில் சூரியனுக்கு தண்ணீர் படைத்து, முன்னோர்களை வழிபடுவதும் சூரிய பகவானால் ஏற்படும் தாக்கத்தையும், பித்ருக்களால் ஏற்படும் சாபம் மற்றும் தோஷத்தையும் நீக்கும்.

READ ON APP