Hero Image

சித்திரை மாதம் 2024 அமாவாசை எப்போது ? இந்த நாளில் எப்படி வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?

அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தான தர்மம் வழங்குவதால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. மாதந்தோறும் வரும் அமாவாசையின் விரதம் இருந்து பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வருடத்தில் வரும் 3 அமாவாசைகளை தவற விடக் கூடாது என்பார்கள்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் ஐப்பசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக முக்கியமானவை என்பார்கள். அதே போல் தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையும் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இந்த ஆண்டு சித்திரை அமாவாசை மே 07ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 11.18 மணி துவங்கி, மே 08ம் தேதி காலை 09.19 வரை அமாவாசை திதி உள்ளது. மே 08ம் தேதி காலை சூரிய உதய நேரத்தின் போது அமாவாசை திதி இருந்தாலும் காலை 09.19 மணியுடன் அமாவாசை நிறைவடைந்து விடுகிறது.
அமாவாசை முடிந்த பிறகு பகல் பொழுதில் முன்னோர்களுக்கு படையல் இட்டு படைக்கக் கூடாது என்பதால், மே 07ம் தேதியையே அமாவாசை நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மே 07ம் தேதியன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு, புனித நீராடி விட்டு, காலை 11 மணிக்கு பிறகு தர்ப்பணம் கொடுக்கலாம். மே 2024 : முக்கிய விரத, விசேஷங்கள், சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வாஸ்து நாட்கள் முழு விபரம் சித்திரை மாதம் என்பது பலவகையிலம் ஆன்மிக சிறப்பு வாய்ந்த மாதமாகும்.
இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு திதிக்கு ஒவ்வொரு சிறப்பு இருப்பது போது அமாவாசை திதிக்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. சித்திரை மாத அமாவாசையில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்டால் திருமணம், வேலை, தொழில் என வாழ்வில் ஏற்படும் எப்படிப்பட்ட தடையும் விலகி விடும். வீட்டில் இருக்கம் வறுமை நிலை , நீண்ட நாள் நோய்கள் ஆகியவை நீங்கும். பொதுவாகவே அமாவாசை நாளில் தானங்கள் வழங்குவதால் பாவங்கள் நீங்கும். உணவு, உடை போன்றவற்றை தானமாக வழங்குவது சிறப்பானதாகும்.
சித்திரை மாத அமாவாசையில் தானம் வழங்குவதால் அதன் பலன் இரண்டு மடங்காக பெருகும் என்பது ஐதீகம்.சூரிய பகவான் சரியாக கிழக்கு திசையில் உதிக்கும் மாதம் சித்திரை மாதம் என்பதால், சித்திரை அமாவாசையில் விரதம் இருந்து சூரியனுக்கு நீர் படைத்து வழிபட்டால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகரிக்கும். அதே போல் சந்திரனின் பலம் அதிகரிக்க வேண்டும், மனக்குழப்பங்கள் அகல வேண்டும் என்பவர்களும் சித்திரை அமாவாசையில் நவகிரக வழிபாடு செய்யலாம்.

READ ON APP