ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. இந்தியாவிடம் ஆசிய கோப்பையை தர பாகிஸ்தான் மந்திரி புது நிபந்தனை!

Hero Image
Newspoint

பிசிசிஐயிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை. ஒருபோதும் மன்னிப்பு கேட்கவும் மாட்டேன் என்று ஆசிய கோப்பையை தர பாகிஸ்தான் மந்திரி புதிய நிபந்தனை விதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனும், பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வி கோப்பையை வழங்க இருந்தார். அப்போது பாகிஸ்தான்  மந்திரியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணி மறுத்து விட்டது. அவருக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் கலீத் அல்ஜரூனிடம் இருந்து பெற்றுக் கொள்கிறோம் என்று இந்திய அணி கூறியது.

Newspoint

இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் மந்திரி மொசின் நக்வி, ஆசிய கோப்பையை தன்னோடு எடுத்து கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படவில்லை. கோப்பை இல்லாமலேயே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது வெற்றியை  வெறுங்கையுடன் கொண்டாடினர்.

இந்நிலையில் நேற்று துபாயில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகளாக துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் பொருளாளர் ஆஷிஷ் ஷிலார் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிய கோப்பை குறித்து பிரச்சினையை எழுப்பினர். அப்போது வெற்றி பெற்ற அணியிடம் கோப்பையை வழங்க வேண்டும். இது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கோப்பையாகும். தனிப்பட்ட நபருக்கு சொந்தமானது கிடையாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆனால் ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்கமாட்டோம் என்ற முடிவில் இருந்து மொசின் நக்வி பின்வாங்கவில்லை. இதனால் ஆசிய கோப்பை எப்போது இந்தியாவுக்கு வரும் என்பதில் நிச்சயமற்ற நிலை நீடித்து வந்தது. ஆசிய கோப்பையை இந்தியாவுக்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்திய நிலையில், போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் மொசின் நக்வி கோப்பையை ஒப்படைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

Newspoint

இந்நிலையில் ஆசிய கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைத்ததாக வெளியான தகவலுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனும், பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வி மறுப்பு தெரிவித்து, ஆசிய கோப்பையை பெற இந்தியாவுக்கு புதிய நிபந்தனை ஒன்றையும் விதித்துள்ளார்.

இது தொடர்பாக மொசின் நக்வி  கூறுகையில், “ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன். கோப்பையை பெற பி.சி.சி.ஐ. ஆர்வமாக இருந்தால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து என்னிடமிருந்து கோப்பையை பெற்றுக் கொள்ளலாம். நான் தெளிவாகச் சொல்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, நான் ஒருபோதும் பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்கவில்லை. ஒருபோதும் மன்னிப்பு கேட்கவும் மாட்டேன்” என்று தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?