Hero Image

RCB vs DC: ரிஷப் பந்த் பங்கேற்க தடை'.. ஆர்சிபிக்கு எதிராக புதுக் கேப்டனை அறிவித்த டெல்லி கேபிடல்ஸ் அணி?

ஐபிஎல் விதிமுறையை மீறிய ரிஷப் பந்த், ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணி:

ஐபிஎல் 17ஆவது சீசனில், டெல்லி கேபிடல்ஸ் அணி 12 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது.


வெற்றி முக்கியம்:

டெல்லி அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் ஆர்சிபி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக மெகா வெற்றியைப் பெற்றால், பிளே ஆப் செல்ல, வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.


தடை:

இந்நிலையில், கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக, ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், ரிஷப் பந்திற்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடையும், கடந்த போட்டிக்கான ஊதியத்தில் 30 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


விதிமுறை என்ன?

ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டால், இரண்டு போட்டிகள் வரை அபராதம் மட்டுமே விதிக்கப்படும். மூன்றாவது முறையும் இதே தவறு நடந்தால்தான், தடையும் விதிக்கப்படும்.


முதல் இரண்டு முறை:

இதற்குமுன், ஏப்ரல் 4ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும், டெல்லி அணி, ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டது.


தண்டனை:

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக, ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டபோது, ரிஷப் பந்திற்கு 12 லட்சம் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்ட நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின்போது 24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. தற்போது, ஒரு போட்டியில் தடை மற்றும் 30 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


புதுக் கேப்டன்:

அடுத்த போட்டியில், ஆர்சிபிக்கு எதிராக ரிஷப் பந்த் பங்கேற்க முடியாத நிலை இருப்பதால், புதுக் கேப்டனாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷாய் ஹோப் செயல்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.


பெரிய பின்னடைவு:

டெல்லி அணி, கடைசி இரண்டு போட்டிகளிலும் மெகா வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும்போது, ரிஷப் பந்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

READ ON APP